அம்மா
சித்திரை எட்டில் பிறந்தவள் பத்தரை திங்கள் சுமந்தவள் நித்திரை இழந்து வளர்த்தவள் உதிரத்தை பாலாய் ஊட்டியவள் அப்பு ராசா என அழைப்பாள் அமுதூட்டியே மகிழ்ந்திடுவாள் உண்ட பின் உண்பாள் உறங்கிய பின் உறங்குவாள் கடிகாரம் பார்த்திடாள் விடிகாலை எழுந்திடுவாள் நெடுநேரம் வேலை செய்வாள் நொடிகூட ஓயமாட்டாள் தனக்கென கனவேதும் கொள்ளாள் எம் கனவை தன் கனவாய் சுமப்பாள் சாமி நீ என்பேன் சாமி நீ இருக்கும் சமையலறையே கோவில் என்பேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤🎂🎊🎈