Posts

அம்மா

 சித்திரை எட்டில் பிறந்தவள்  பத்தரை திங்கள் சுமந்தவள் நித்திரை இழந்து வளர்த்தவள்  உதிரத்தை பாலாய் ஊட்டியவள்  அப்பு ராசா என அழைப்பாள்  அமுதூட்டியே மகிழ்ந்திடுவாள் உண்ட பின் உண்பாள்  உறங்கிய பின் உறங்குவாள்  கடிகாரம் பார்த்திடாள் விடிகாலை எழுந்திடுவாள் நெடுநேரம் வேலை செய்வாள் நொடிகூட ஓயமாட்டாள்  தனக்கென கனவேதும் கொள்ளாள்  எம் கனவை தன் கனவாய் சுமப்பாள் சாமி நீ என்பேன் சாமி நீ இருக்கும்  சமையலறையே கோவில் என்பேன்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤🎂🎊🎈

இணுவில் மஞ்சத்தடி

 செம்புரவி மீதினிலே எம்பெருமான் ஆடி வந்தார் அம்பிகை உடனிருக்க அம்பலவனும் ஆடி வந்தான் தும்பிக்கையனும் துணையாக ஐயனுடன் கூட வந்தான் தம்மடியார் துயர் துடைக்க மஞ்சத்தடி முருகன் வந்தான்  #மஞ்சத்தடி_முருகன்_சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி

இணுவில் மஞ்சத்தடி

 செம்புரவி மீதினிலே எம்பெருமான் ஆடி வந்தார் அம்பிகை உடனிருக்க அம்பலவனும் ஆடி வந்தான் தும்பிக்கையனும் துணையாக ஐயனுடன் கூட வந்தான் தம்மடியார் துயர் துடைக்க மஞ்சத்தடி முருகன் வந்தான்  #மஞ்சத்தடி_முருகன்_சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி
Image
 பொன்னை நிகர்த்த நிலவே  என்னை விட்டு ஏனடி நீங்கினையோ தன்னந் தனிமையிலே மயிலே ஏன் என்னைத் தவிக்கவிட்டாய் 💔  ஆங்கு நின் நினைவில் அன்னமே ஏங்கியே அழுகின்றேன்  தீங்கென்ன செய்தேனடி என்னைவிட்டு  நீங்குதல் முறைதானோ 💔 முற்றத்து மல்லிகையே அழகே  நற்றுணை நீயலையோ   பற்றற்று போனியடி உயிரே  சுற்றிலும் வெறுமையடி 💔 காதல் போர்க்களத்தில் சகியே  எதிரணி நீயலையோ சாதல் வேண்டுமெனில் உனக்கே சாதகமாய் தந்திடுவேன் ❤💔 #இணுவை_நித்தியதாஸ்  #சின்னஞ்சிறு_நிலவே_பிரதிபலிப்பு

இணுவில் மஞ்சத்தடி

 கருணை மழை பொழிய     கந்தன் வந்தான் வீதியிலே அருகருகாய் அழகு அன்னை                                 அமர்ந்திருக்க பவனி வந்தான் அருணகிரி பாடி வந்தான்        அகிலமெங்கும் திருப்புகழை திருவடி தொழுது நின்றோம்      முருகா சரணம் என்றோம்  மஞ்சத்தடி முருகா சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி

சிவகாமி அம்மன்

 சித்திரை நிலவு முகம் சிற்றிடை அழகுடையாள்  சித்திரப் பூவிழியாள் சிற்றாடை உடுத்தி வந்தாள் கொத்தாக பூவணிந்தாள் கற்றைக் குழல் அதன்மேல்  இத்துணை அழகு கொண்டால் எங்ஙனம் வர்ணிப்பேன் எத்துணை துயர் வரினும் எம்துணையாய் அருகிருப்பாள்  நித்திலப் புன்னகையாள் நித்தமெமைக் காத்திடுவாள்  ஓம் சிவகாம சுந்தரியே போற்றி 🙏❤🙏 Inuvil Sivakami Amman Kovil

மஞ்சத்தடி

 ஒளியாக என்னுள் வளர்கின்ற இறையே அழியாத வாழ்வை தருவோனே  விழியாலே கருணை பொழிகின்ற முருகா வழியெங்கும் துணையாய் வருவோனே கிளியான அருண கிரிநாதன் தோளில் அழகாக அமர்ந்து வரும் நாதா  துளியேனும் உன்னை நினையாமல் நானும் எளிதாக மறந்து இருப்பேனோ மஞ்சத்தடி முருகா சரணம் 🙏 இணுவில் மஞ்சத்தடி