பொன்னை நிகர்த்த நிலவே
என்னை விட்டு ஏனடி நீங்கினையோ
தன்னந் தனிமையிலே மயிலே
ஏன் என்னைத் தவிக்கவிட்டாய் 💔
ஆங்கு நின் நினைவில் அன்னமே
ஏங்கியே அழுகின்றேன்
தீங்கென்ன செய்தேனடி என்னைவிட்டு
நீங்குதல் முறைதானோ 💔
முற்றத்து மல்லிகையே அழகே
நற்றுணை நீயலையோ
பற்றற்று போனியடி உயிரே
சுற்றிலும் வெறுமையடி 💔
காதல் போர்க்களத்தில் சகியே
எதிரணி நீயலையோ
சாதல் வேண்டுமெனில் உனக்கே
சாதகமாய் தந்திடுவேன் ❤💔
#இணுவை_நித்தியதாஸ்
#சின்னஞ்சிறு_நிலவே_பிரதிபலிப்பு
.jpeg)
Comments
Post a Comment