சிவகாமி அம்மன்

 சித்திரை நிலவு முகம் சிற்றிடை அழகுடையாள் 

சித்திரப் பூவிழியாள் சிற்றாடை உடுத்தி வந்தாள்

கொத்தாக பூவணிந்தாள் கற்றைக் குழல் அதன்மேல் 

இத்துணை அழகு கொண்டால் எங்ஙனம் வர்ணிப்பேன்

எத்துணை துயர் வரினும் எம்துணையாய் அருகிருப்பாள் 

நித்திலப் புன்னகையாள் நித்தமெமைக் காத்திடுவாள் 


ஓம் சிவகாம சுந்தரியே போற்றி 🙏❤🙏

Inuvil Sivakami Amman Kovil

Comments