காற்றுக்கு வாசனை கொடுக்கிறாள்
காற்றுக்கு வாசனை கொடுக்கிறாள்
கன்னி என் முன்னே சிரிக்கிறாள்
சேற்று விழிகளில் என்னை புதைக்கிறாள்
சேதி ஒன்று சொல்ல முனைகிறாள்
சோற்றுப் பருக்கைகளும்
சுவை கூடுதே!
உண்ட எச்சில் சோறினால்
உயிரினங்களும் மோட்சமடையுதே!
ஊற்று இதழ்களில் ஊறும் தேனை
நூற்றுக்கணக்கில் நுகரத் துடிக்கும்
வண்டினங்களிடமிருந்து
அவளை எங்ஙனம் காப்பேனோ
ஏற்றுக்கொண்டிடில் எனை இக்கணமே
எளிதினில் காப்பேன் மறுகணமே
😍😍😍
Comments
Post a Comment