மேலான காதல் என்பது மேலைத்தேயம் மீதானது
பொத்தி வச்ச பூஞ்செடி - உன்னை
சுத்தி வந்தேன் நானடி
சத்தக கண்ணால் சீவுறாய் - எதுக்கு
சண்டித்தனம் காட்டுறாய்
வத்தலா நான் காயிறன் - வீட்டு
வாசலில தான் கிடக்கிறன்
வித்தை பல காட்டுறாய் - நின்று
வேடிக்கை நான் பார்க்கிறேன்
அத்தை மகள் பூங்கொடி - ஏனோ
அடம்பிடித்து இருக்கிறாய்
ஒத்தையில நான் நிக்கிறன் - நீயோ
ஒதுக்கி வச்சு நடக்கிறாய்
பத்தி இதயம் எரியுதடி - வீணா
புத்திகெட்டு காதலிச்சன்
கத்திக் கத்தி அழுதழுது - எமக்கு
காலம் வீணா போகுதடி
வாழைத் தண்டே வாச செண்டே -உன்
மேல நானும் ஆசை கொண்டேன்
நாளும் உன்னை எண்ணி எண்ணி
ஏழை நானும் வாடுறண்டி
ஆளான நாள் முதலா ஆதாரமானவளே
ஆழமான காதல் என்றெல்லாம் சொன்னவளே
மேலான காதலை உதறித் தள்ளிவிட்டு
மேலைத்தேயம் போக எப்படித்தான் துணிந்தாயோ

Comments
Post a Comment